• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா வெற்றியே காணாத போர்ட் எலிசெபத் – சரித்திரம் படைக்குமா?

February 14, 2018 tamilsamayam.com

தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசெபத் மைதானத்தில் இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்ற மோசமான வரலாறு உள்ளது.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், 4 ஒருநாள் போட்டி முடிவில் 3-1 என வென்று இந்தியா முன்னிலை வகிக்கின்றது.

சரித்திரம் படைக்குமா இந்தியா :

இதுவரை போட்டி நடக்கும் தென் ஆப்ரிக்காவின் போர்ட் எலிசெபத்தில் உள்ள புனித ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த மைதானத்தில் இந்தியா விளையாடியுள்ள 5 ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது.

2 டெஸ்ட் போட்டியில் ஒரு தோல்வி, ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. அதே சமயம் தென் ஆப்ரிக்கா அணி இந்த மைதானத்தில் விளையாடியுள்ள 62 சர்வதேச போட்டிகளில் 23 போட்டிகளில் மட்டும் தோல்வியடைந்து 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா வென்று தொடரை வெல்வதோடு, இந்த மைதானத்தில் வென்று, தோல்வி சாரித்திரத்தை மாற்றும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மேலும் படிக்க