• Download mobile app
02 Sep 2026, WednesdayEdition - 3857
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பி எடுத்த போது ராட்சத அலையில் சிக்கி கணவன் மனைவி பலி

July 19, 2016 தண்டோரா குழு

நாகர்கோவில் அருகே கடற்கரையில் செல்போனில் ‘செல்பி’ எடுத்த கணவன் மனைவி ஆகியோரை ராட்சத அலை இழுத்துச் சென்றதில் இருவரும் பலியாகியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் மக்களுடைய கைகளில் ஸ்மார்ட்போன் இருப்பதால் வெவ்வேறு இடங்களில் நின்று செல்பி எடுப்பதை ஒரு வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். அவ்வாறு அவர்கள் நின்று எடுக்கும் இடங்கள் ஆபத்தானவை என்பதை யோசிக்காமல் இருபதால் பல நேரங்களில் தங்கள் உயிரையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப் (42) சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாத்திமா பீவி (40) மதரசா பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உமர் ஷெரீப்பின் நண்பர் ஜாபர் சாதிக் (45) பனியன் கடை நடத்தி வருகிறார். உமர் ஷெரீப், ஜாபர் சாதிக் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் ஒரு காரில் குமரி மாவட்டத்துக்குச் சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் நாகர்கோவில் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரை வந்தனர். அங்கு உமர் ஷெரீப்பும், பாத்திமா பீவியும் கடலில் கால்களை நனைத்தபடி தங்கள் செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது வந்த ராட்சத அலை பாத்திமா பீவியை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உமர் ஷெரீப், மனைவியைக் காப்பாற்ற முயன்ற போது அவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இதனால் கரையில் இருந்த அவர்களின் மகள்கள் அலறியடித்துக்கொண்டு பெற்றோரைக் காப்பாற்ற கடலுக்குள் ஓடினர். அப்போது மீண்டும் பெரிய அலை வந்ததால் ஜாபர் சாதிக், நண்பரின் மகள்களைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்றார். அதற்குள் உமர் ஷெரீப், பாத்திமா பீவி ஆகியோரைக் கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது.

இதைகண்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலில் இறங்கி, கணவன் மனைவி இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது. அதில் இருந்த மருத்துவ குழுவினர் இருவரையும் பரிசோதித்துப் பார்த்து விட்டு அவர்கள் இறந்து விட்டதாகக் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க