• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் தங்கமணி

February 5, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையிலான கூடைபந்து இறுதி போட்டி நடைப்பெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையிலான கூடைபந்து இறுதி போட்டியில் பரிசளிப்பு விழாவில்  அமைச்சர் தங்கமணி  பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு  பேச்சுவார்த்தைக்கு   அழைப்பு விடுக்கும் போதே ஒரு சில சங்கங்கள்  வேலை நிறுத்ததில் ஈடுபடுவதாக அறிவிக்கின்றனர்.இது உள்நோக்கம் கொண்டது.

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில்  தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், புதிய வழித்தடம் மூலம் 150 மெகா வாட்  கொடுக்கப்படுவதாகவும்,   500 புதிய வழித்தடம் ஏற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உதய் மின் திட்டத்தில் இணைந்த பிறகுதான் 13 ஆயிரம் கோடி இருந்த கடன் தற்போது 4000 கோடியாக குறைந்து இருப்பதாகவும், அடுத்த ஆண்டில் இந்த ஆண்டில் இந்த கடன் தொகை மேலும் குறைக்கப்படும்.

நிலக்கரி இறக்குமதி கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவையானவற்றை மத்திய அரசே கொடுத்ததாகவும், தற்போது நிலக்கரி உற்பத்தி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால் , இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

 

 

மேலும் படிக்க