• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு புதிய சீருடை

December 23, 2017 தண்டோரா குழு

இந்திய ரயில்வேயின் ராஜ்தானி, சதாப்தி, மற்றும் டுராண்டோ ஆகிய ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் அதன் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் ராஜ்தானி, சதாப்தி, மற்றும் டுராண்டோ எக்ஸ்பிரஸ் ரயில்கள், இந்திய ரயில்வே நெட்வொர்கின் மிக உயர்ந்த முன்னுரிமை பெற்ற ரயில்கள் ஆகும்.இந்த ரயில்கள் தலைநகர் புதுதில்லியில் இருந்து நாட்டின் மற்ற மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

இந்த ரயில்களில் பணிபுரியும் டிக்கெட் பரிசோதகர் மற்றும் அதன் மேற்பார்வை அதிகாரிகளுக்கு,
புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.மேலும், இந்த புதிய சீருடை மற்ற ரயில்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க