• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடலில் 300 மைல் தொலைவில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்பு

December 19, 2017 தண்டோரா குழு

மும்பையில் இருந்து 300 மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் புரட்டி போட்டது. புயல் நேரத்தில் மீன் பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.இதற்கிடையில், ஓகி புயலில் சிக்கி 433 தமிழக மீனவர்கள், கேரளாவின் 186 மீனவர்கள் என மொத்தம் 619 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மும்பையில் இருந்து 300 மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்களை குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டனர்.ஓகி புயலில் மாயமான 10 பேரை 18 நாட்களுக்கு பின், அதே ஊரை சேர்ந்த மீனவர்கள் மீட்டனர்.

ஒக்கி புயலின்போது, படகு கவிழாமல் இருக்க தார்ப்பாலின் பாராசூட் மூலம் காத்துக் கொண்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.இதனால் மீட்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க