• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

December 12, 2017 தண்டோரா குழு

உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு பேருக்கு இரட்டை தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் (22). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யா (19). என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சங்கர்-கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார்.

இதையடுத்து, இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசாந்த் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கூட்டுசதி, 5 பேருக்கு மேல் ஒன்று கூடுதல், வன்கொடுமை, பொதுஇடத்தில் கொடூரமான ஆயுதத்தால் தாக்குதல், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைதானவர்களில் கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை திருச்சி சிறையிலும், மற்ற 10 பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 11 பேர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

மேலும், உடுமலை சங்கர் கொலை வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 1500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளது. கொலை வழக்கில் கைதான 11 பேரும் இன்று திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனால் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அப்போது, நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தங்களுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும்,அரசு தரப்பில் அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்த கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரை விடுதலை செய்தார்.

ஆனால், கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, 4,5,6,7,8வது குற்றவாளிகளான ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், தமிழ் வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள்ளார்.9 வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கினார்.

மேலும், சின்னசாமிக்கு 3 லட்சம் அபராதம் விதித்தும் அந்த தொகையை கெளசல்யாவிடம் கொடுக்குமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் படிக்க