• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் ராக்கர்ஸ் மீது முதல் முறையாக போலீஸார் வழக்குப்பதிவு

December 11, 2017 தண்டோரா குழு

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முதன் முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழில் எந்த ஒரு புதிய படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டாலும், அடுத்த சிலமணி நேரத்தில் அதனை உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் வெளியிட்டு விடும். இதனால் தமிழ் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில், இப்படை வெல்லும் படத்தை அனுமதியின்றி தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ராஜசேகரன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முதன் முறையாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க