• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி வரும் ஜெயராமன் மீண்டும் கைது

December 11, 2017 தண்டோரா குழு

ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகளுக்கு எதிராக நன்னிலத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பேராசிரியர் ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஆழ்குழாய் எண்ணெய் கிணறு அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவரும்,பேராசிரியருமான ஜெயராமன் அங்கு வந்தார்.

அப்போது, அங்கு வந்த போலீசார் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 4 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ஏற்கனவே, ஓஎன்ஜசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, ஜெயராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க