• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடிசாவில் ஆதார் அட்டை உதவியால் காணாமல் போன சிறுவன் மீட்பு

December 9, 2017 தண்டோரா குழு

ஓடிசாவில் ஆதார் அட்டையின் உதவியால் காணாமல் போன சிறுவன் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளான்.

ஒடிசாவில்,நெடுஞ்சாலையில் மனநலம் குன்றிய, சிறுவன் தனியே போய்கொண்டு இருப்பதை காவலர்கள் பார்த்துள்ளனர்.இதனையடுத்து அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில்,அந்த சிறுவனின் பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்க, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல்துறையினர், காணாமல்போன குழந்தை என்னும் தலைப்பின் கீழ், அந்த சிறுவனை குறித்து பல இடங்களில் விளம்பரம் செய்தனர். ஆனால், அந்த சிறுவனை தேடி யாரும் வரவில்லை.

இதையடுத்து,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் மாவட்ட ஆதார் மையத்தின் உதவியை நாடினர். அந்த சிறுவனின் கைரேகையை சரிபார்த்த போது, அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் காந்திநகர் பகுதியை சேர்ந்த, சுரேஷ் குமார் மற்றும் மஞ்சு தேவியின் கைரேகையுடன் ஒத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் பிறகு,அந்த சிறுவனை அவனுடைய பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும்,அந்த சிறுவனின் சிகிச்சிக்காக அம்மாவட்ட கலெக்டர் 1௦,௦௦௦ ரூபாயை வழங்கினார். காணாமல் போன எங்கள் மகன்,மீண்டும் எங்களுக்கு கிடைப்பான் என்ற நம்பிக்கையை இழந்திருந்த நிலையில் ஆதார் அட்டையின் உதவியுடன், எங்கள் மகன் எங்களுக்கு திரும்ப கிடைத்தான்.

மேலும் படிக்க