• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பி எடுத்த மகளிர் ஆணைய உறுப்பினருக்கு நோட்டீஸ்.

June 30, 2016 தண்டோரா குழு

ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை விசாரிக்கச் சென்ற அம்மாநில மகளிர் ஆணைய பெண் உறுப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணோடு செல்பி எடுத்துக்கொண்டது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரதட்சணை தராததால் 30 வயது இளம் பெண்ணை, அப்பெண்ணின் கணவனும், அவனது சகோதரனும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது மட்டுமின்றி அப்பெண்ணின் நெற்றியிலும், கையிலும் வரதட்சணை தராதவர் எனப் பச்சை குத்தியும் கொடுமைப்படுத்தினர்.

அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்க அம்மாநில மகளிர் ஆணைய தலைவர் சுமன் சர்மா மற்றும் உறுப்பினரான சோம்யா சம்ஜார் ஆகியோர் நேரில் சென்றுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மகளிர் ஆணைய உறுப்பினரான சோம்யா சம்ஜார் செல்பி ஒன்றை எடுத்துள்ளார். இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து இந்த செல்பிக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதனைத் தொடர்ந்து சோம்யா சம்ஜாரிடம் விளக்கம் கேட்டு ராஜஸ்தான் மகளிர் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க