கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலக முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு சச்சினை பிடிக்குமோ அந்த அளவிற்கு அவரது ஜெர்சி எண் 10க்கும் புகழ் உள்ளது. இதனால் அந்த எண் சச்சினின் அடையாளமாகவே பார்க்கபடுகிறது.
கடைசியாக 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் 10ம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தினார். அதன்பின் அந்த எண் கொண்ட ஜெர்சியை கொண்ட யாரும் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் சர்துல் தாக்கூருக்கு 10வது எண் ஜெர்சி வழங்கப்பட்டது.அது ரசிகர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் அனுமதி வாங்கிய பின் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு