• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்

November 29, 2017 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் நூறு பேர் காலவரையற்ற போராட்டத்தில் இன்று(நவ 29) ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசு சாரா மருத்துவர்களை நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து,முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் நூறு பேர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசு சாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வை செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கு,அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டிய நிலை பறிபோகி உள்ளது.

இதனை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிலும் மருத்துவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் முறைகேடாக நிரப்பிய இடங்களை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும்,சமூக நீதிக்கு எதிராக இட ஒதுக்கீட்டை பின்பற்றானல் நேரடியாக நியமனம் செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கமிட்டனர். ஜி.ஓ 132 ஐ அமல்படுத்த வேண்டும் எனவும் உடனடியாக போராட்டகாரர்களூடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க