• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்டண உயர்வால் 3 லட்சம் ரயில் பயணிகளை இழந்த புதுதில்லி மெட்ரோ ரயில் சேவை

November 25, 2017 தண்டோரா குழு

புதுதில்லியின் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகரித்துள்ளதால், சுமார் 3 லட்சம் பயணிகள் ரயிலில் பயணிப்பதை தவிர்த்துள்ளனர்.

புதுதில்லியில் பணிக்கு செல்லும் பலர், தங்கள் பணியிடங்களுக்கு விரைந்து செல்ல மெட்ரோ ரயில் சேவையைபயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் தினசரி சுமார் 27.4 லட்சம் பேர் ரயிலில் பயணித்தனர். ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 11 சதவீதம் குறைந்து, 24.2 லட்சம் மக்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்தனர்.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “மெட்ரோவின் பரபரப்பான ரயில் என்று கருதப்படும் ‘ப்ளூ லைன்’,சுமார் 30 லட்சம் பயணிகளை இழந்துள்ளது. இந்த ரயில் துவார்கா-நொய்டாவை இணைக்கிறது. அதேபோல், புதுதில்லியின் வடக்கில் உள்ள சமயபூர் பாட்லி-குர்கானை இணைக்கும், மஞ்சள் லைன்’ மெட்ரோ ரயில், சுமார் 19 லட்சத்துக்கும் மேலான பயணிகளை இழந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க