காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ளது என டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த 1998ம் ஆண்டு கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்றார்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் 19 ஆண்டுகள் நீடித்துள்ளார்.இந்நிலையில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு,ராகுல் காந்தியை தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.
இதனையடுத்து,ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும், இந்த தேர்தலில் ராகுலை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவருக்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிச.4ம் தேதி வரை நடைபெறும்.தேர்தல் முடிவுகள் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்