• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் பெண் மனு

November 20, 2017 தண்டோரா குழு

கோவை சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநரின் மனைவி,விரைவில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் மேற்கூறை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடும், அரசு பணியும் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து சிவக்குமார் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.ஆனால் அவருக்கு வழங்குவதாக கூறிய அரசு பணி இன்னும் வழங்கப்படாமல் உள்ளதால், தங்கள் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், உடனடியாக மதுரையில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிவக்குமாரின் மனைவி சவுந்தர்யா தனது கைக்குழந்தையுடன் மனு அளித்தார்.

மேலும் படிக்க