• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னதாகவே துவங்கும் ஒருநாள் போட்டிகள்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு!

November 20, 2017

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் இரண்டு மணி நேரம் முன்னதாக துவங்கும் என பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடக்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் வரும் டிசம்பர் 10ல் துவங்குகிறது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் வட இந்தியாவில் அதிகமான குளிர் மற்றும் பனிப்பொலிவு நிலவும் என்பதால், போட்டி வழக்கமான நேரமான மதியம் 1.30 க்கு பதிலாக இரண்டு மணிநேரம் முன்னதாக (11.30 மணி) துவங்கும் என பிசிசிஐ.,இன்று அறிவித்துள்ளது.

இதேபோல வரும் டிசம்பர் 13ல், மொஹாலியில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியும் 11.30 மணிக்கு துவங்கும் என பிசிசிஐ., அறிவித்துள்ளது. ஆனால் டிசம்பர் 17ல் விசாகப்பட்டினத்தில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி வழக்கம் போல மதியம் 1.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க