• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை !

November 18, 2017 தண்டோரா குழு

உலகில் முதன் முதலாக தலை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் செர்ஜியோ கனவெரோ கூறியுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த மருத்துவர் செர்ஜியோ 2017ஆம் ஆண்டுக்குள் தலை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்படும் என்று முன்பு ஊடகங்களுக்கு இவர் சவால் விட்டார். தன் சவாலை நிறைவேற்றும் வகையில் இரண்டு இறந்தவர்களின் உடலை வைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு இச்சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,அறுவை சிகிச்சையின் போது மனிதனின் தலையை ஒட்ட வைத்த போது, நரம்புகள், முதுகெலும்பு தண்டு, இரத்த நாளங்கள் இணைக்கப் படுவதற்கான சாத்தியம் இருப்பதை கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ள அவர் விரைவில் மூளைச்சாவு அடைந்த இருவரை வைத்து இந்த அறுவை சிகிச்சையை செய்து பார்க்கப் போவதாகவும் இது மருத்துவ உலகில் பெரும் புரட்சி எனவும் அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க