• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி !

November 17, 2017 தண்டோரா குழு

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சி.பி.ஐ.,நீதிமன்றமாக வழங்கிய 2 வருட சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

சசிகலாவின் கணவர் நடராஜன்; லண்டனில் இருந்து, ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அது 1994ல் வெளியான புதிய ரக கார் என, தெரிய வந்தது. இதையடுத்து வரி ஏய்ப்பு மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின், அபிராமபுரம் கிளை மேலாளர் சுசுரிதா ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது.

அப்போது, தொழிலதிபர் பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அதனால், நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணையில் எழும்பூர் நீதிமன்றம், நடராஜன் உட்பட நான்கு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2010ல் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, நான்கு பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 4 பேரின் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. எனினும், தண்டனயை நிறுத்தி வைக்க வேண்டும் என 4 பேரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நிராகரித்த நீதிபதி, சரணடைய கால அவகாசம் குறித்து சிபிஐ நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார். இதற்கிடையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகலா கணவர் நடராஜன் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

மேலும் படிக்க