• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச் சிகிச்சை முகாம்

November 17, 2017 தண்டோரா குழு

கோவையில் திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச்சிகிச்சை முகாம் இன்று(நவ 17) நடைபெறுகிறது.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, மாவட்ட முன்னோடிகள் வங்கி ஆகியவை இணைந்து திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச்சிகிச்சை முகாமை நடத்துகின்றனர்.இந்நிகழ்ச்சி கோவை இராமலிங்கம்காலனி திருமணமண்டபத்தில் இன்று(நவ 17)
நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கையர்களின் வாழ்வை வளமூட்டும் வகையிலும், சமூக பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்றவும்,சுயசார்பு அடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும்,திருநங்கையர்களின் திறன்களை அறிந்து அதற்கேற்றவாறு இலவச பயிற்சி அளிக்கப்படுவதுடன். பயிற்சிக்குபின் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் கடனுதவி பெற வழிகாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டதைச் சேர்ந்த திருநங்கையர்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை மெருகேற்றி கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க