• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயிரை மீனை மாநில மீனாகஅங்கீகரிக்க நடவடிக்கை

November 16, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அயிரை மீனை மாநில மீனாக அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மீன் வகைகளை அடையாளம் காண மத்திய அரசு கேட்டுள்ளது.

இதனையடுத்து, கேரளா மாநிலம் கறி மீனையும் மற்றும் தெலங்கானாவில் முரல் மீனையும் கியவை அந்த மாநிலத்தின் மீன்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் மாநில மீனாக ‘அயிரை மீனை’அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது.

அயிரை மீன் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் கிடைகின்றன.சந்தையில் ஒரு கிலோ அயிரைமீன் சுமார் 1,200 ரூபாய் மற்றும் 1,500 ரூபாய்க்கு இடையே விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் சென்னையிலுள்ள மாதவரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரக்காய் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மையங்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.அயிரை மீன் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணம் கொண்டது. அதனை சுத்தம் செய்யும்போது, அதன் எலும்புகளை எடுக்கததால், அதை உண்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்கிறது என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க