• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

70வது திருமண நாளை கொண்டாடிய இங்கிலாந்து அரசி

November 16, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து அரசி எலிசபெத் தனது கணவர் பிலிப்புடன் தங்களது 7௦வது திருமண நாளை கொண்டாடினர்.

லண்டனில் கடந்த 1947ம் ஆண்டு, நவம்பர் 2௦ம் தேதி,இங்கிலாந்து இளவரசி எலிசபெத் கடற்படை அதிகாரி பிலிப்பை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுடைய திருமணவிழாவில் உலகின் பல முக்கிய தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் கலந்துக்கொண்டனர்.

சுமார் 70 ஆண்டுகள் கடந்த பிறகும், தற்போது 91 வயது அரசி எலிசபெத்தும் 96 வயது பிலிப்பும் இன்றுவரை சிறந்த தம்பதியினராகவே வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய 7௦வது திருமண விழாவை,லண்டனில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினர். அவர்களுடைய திருமண விழாவை முன்னிட்டு எந்தவித பொது விழா ஏற்பாடு செய்யப்படவில்லை.

கடந்த 1934ம் ஆண்டு, இளவரசர் பிலிப்பின் உறவினர் கிரீஸ் நாட்டின் இளவரசி மரியானா இங்கிலாந்து நாட்டின் பிரபுவாக இருந்த எலிசபெத்தின் மாமாவை திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமண விழாவில் அரசி எலிசபெத்தும் இளவரசர் பிலிப்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். கடந்த 1947ம் ஆண்டு அவர்களுடைய நிச்சியதார்த்தம் முடிந்து 4 மாதங்களுக்கு பிறகு அவர்களுடைய திருமணம் நடைப்பெற்றது.

இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் 65 ஆண்டு ஆட்சி காலத்தில், அவருக்கு துணையாக இளவரசர் பிலிப் இருந்தார். கடந்த 1952ம் ஆண்டு, அரசி எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் இறந்த செய்தியையும், அவருக்கு அடுத்து இங்கிலாந்து நாட்டை ஆளப்போகும் அரசி எலிசபெத் என்ற செய்தியை கூறியதும் இளவரசர் பிலிப்.

கடந்த 1997ம் ஆண்டு, தங்களுடைய 5௦வது திருமண விழாவின்போது, அரசி எலிசபெத் தனது கணவருக்கு ஒரு அரிய பரிசு ஒன்றை வழங்கினார். அதோடு, இங்கிலாந்து அரச பரம்பரையில் 6௦வது திருமண விழாவை கொண்டாடிய பெருமை அரசி எலிசபெத்தை சாறும்.

மேலும் படிக்க