• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மன நிலை சரியில்லாதவர்களுக்கு தங்க மனை கொடுக்க மனமில்லா டெல்லி

June 25, 2016 தண்டோரா குழு

டெல்லியில் காஷ்மீரீ கேட் அருகே மனநலம் குன்றிய பெண்மணி போக்கிடமின்றி வீதியில் ஆதரவின்றி அலைந்து கொண்டிருந்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மகளிர் பாதுகாப்பு விடுதி நிர்மல் சாயா இவரை அனுமதிக்க மறுத்ததே இதன் காரணம்.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்டிரின் சிகிச்சைக்காக நிறுவப்பட்ட ஐந்து பாதுகாப்பு மனைகளும் டெல்லியில் உபயோகிக்கப் படாமலேயே உள்ளன. நோயாளிகளை கவனிக்கத் தேவையான வசதிகள் எதுவும் இம்மனைகளில் இல்லை என்பது இதைப் பராமரிப்பவர்களின் வாதம். அதன் விளைவு இத்தகைய நோயாளிகள் வருந்தத்தக்கச் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மனநிலை குன்றிய பெண்களைப் பராமரிக்கும் பொறுப்பை இன்ஸ்டிடுட் ஆஃப் ஹுமன் பிஹேவியர் & அலைட் சயின்ஸ்(IHBAS) அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென நிர்மல் சாயா மையம் டெல்லி நீதி மன்றத்தை அணுகியுள்ளது.

தங்களது பொறுப்பு ஆதரவற்ற பெண்களைப் பராமரிப்பது மட்டுமே என்று IHBAS அமைப்பு பதிலளித்துள்ளது.

சமூக நலத்துறை, இந்நிலைப் பெண்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டியுள்ளது என்றும், ஆனால் அதற்குத் தேவையான தொழில் நுட்ப வசதிகளை IHBAS இதுவரை செய்து தரவில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மையம் குற்றம் கூறியுள்ளது.

மன நிலை குன்றிய நபர்களைப் பராமரிக்கும் நிறுவனங்களை அமைக்கும் பொறுப்பு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைச் சேர்ந்ததே என்றும் தெரிவித்துள்ளது.

ஒருவருக்கொருவர் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதனால் துயரம் நோயாளிகளுக்கே.

மேலும் படிக்க