• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழக ஆளுநரை,முன்னாள் இராணுவ வீரர்கள் நலசங்கத்தினர் சந்தித்து மனு

November 15, 2017 தண்டோரா குழு

கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முன்னாள் இராணுவ வீரர்கள் நலசங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

கோவைக்கு இருநாட்கள் பயணமாக வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முன்னாள் இராணுவ வீரர் நலசங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,தமிழக முதல்வருக்கு இந்த மனுவை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் இராணுவ வீரர்கள் நல சங்கத்தினர் ,

முன்னாள் இராணுவத்தினருக்கும்,அவர்களது வாரிசுகளுக்கும் வேலை வாய்ப்பில் கூடுதல் ஓதுக்கீடு வழங்க வேண்டும். இராணுவ வீரர்களுக்கும்,அவர்களது துணைவியருக்கும் இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும். கோவை மலுமிச்சம்பட்டியில் இராணுவத்தினருக்கும்,விதவைகளுக்கும் ஓதுக்கீடு செய்யப்பட்ட தொகுப்பு வீடுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கைகள் தொடர்பான மனுவை ஆளுநரிடம் அளித்து இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க