• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.எஸ்.டி வரியால் 30 சதவீத வர்த்தகம் புதுவையில் பாதிப்பு-முதலமைச்சர் நாரயணசாமி

November 13, 2017

கேரளாவில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நடை பயண துவக்க விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுவை முதலமைச்சர் நாரயணசாமி இன்று கோவை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார் என விமர்சித்தவர்,அன்றாடம் அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கோ, துணை நிலை ஆளுநருக்கோ உரிமை இல்லை.பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சி ஏற்படவில்லை மாறாக பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரியால் மேலும் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ,மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்படும் என கொடுத்த வாக்குறுதிபடி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார்.

தற்போது மத்திய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
புதுச்சேரி மாநில அரசு மக்கள் நல திட்டங்களில் உறுதியாக இருக்கும் நிலையில்,கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களுக்கு தடை போடுகிறார் என குற்றம் சாட்டினார்.

அரசின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளை அழைத்து பேச ஆளுநருக்கோ துணை நிலை ஆளுநருக்கோ அதிகாரம் இல்லை எனவும்,மாநில அரசு நிர்வாகங்களில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளதால் அதிகம் பாதிக்கப்பட்டது புதுவை மாநிலம் தான் என குற்றச்சாட்டினார்.

மேலும்,மக்கள் நல திட்டத்தை நிறைவேற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட்வர்களுக்கு அதிகாரம் உண்டு அதனை முடக்க நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை என்பதே எங்களது வாதம்.

வருமான வரித்துறைக்கு சோதனை மேற்கொள்ள அதிகாரம் உண்டு ஆனால் அதில் பாரபட்சம் இருக்க கூடாது எனவும்,புதுவையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால்
தான் வறட்சியிலும் புதுவையில் மக்கள் பாதிக்கப்படவில்லை .

மத்திய அரசு நிதியளிக்காவிட்டாலும் நலத்திட்ட உதவிகளை நிறுத்தவில்லை.ஆனால் தாமதமாகிறது என்றும் அதற்கு காரணம் துணை நிலை ஆளுநரே எனவும் கருத்து தெரிவித்தார்.புதுவையில் இருந்து கோவை ,திருப்பதி,ஹைதராபாத் என முக்கிய நகரங்களுக்கு விமான சேவை வசதி மேற்கொள்ளப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு முறையற்ற அதிக வரி விதிக்கப்பட்டதை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி,தற்போது அதனை அரசே குறைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிருப்பதாக குறிப்பிட்டார்.

வருமான வரித்துறை மத்திய அரசுக்கு பணியாத நபர்களை, வியாபாரிகளை , பணியவைக்க சோதனை செய்கின்றனர்.மூன்று நியமன எம்.எல்.ஏ க்கள் பதவி ரத்து விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் தான் கேட்க வேண்டும்.

ஜி.எஸ்.டி வரியால் 30 சதவீத வர்த்தகம் புதுவையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க