• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் சரணடைந்தனர்

November 13, 2017 தண்டோரா குழு

கோவையில் இடத்தகறாறு காரணமாக பழனிச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் ஏ.எஸ்.குளம் கிராமநிர்வாக அலுவலர் முன்பு சரணடைந்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த அக்ரானம் பகுதியில் நேற்று இரவு இடத்தகறாறு காரணமாக பழனிச்சாமி மற்றும் ரங்கசாமி இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ரங்கசாமி மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஆகியோர் பழனிச்சாமியை கத்தியால் குத்தினர். இதில் பழனிச்சாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரங்கசாமி மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஏ.எஸ்.குளம் கிராமநிர்வாக அலுவலர் ஹேமா முன்பு சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க