• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் சரணடைந்தனர்

November 13, 2017 தண்டோரா குழு

கோவையில் இடத்தகறாறு காரணமாக பழனிச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் ஏ.எஸ்.குளம் கிராமநிர்வாக அலுவலர் முன்பு சரணடைந்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த அக்ரானம் பகுதியில் நேற்று இரவு இடத்தகறாறு காரணமாக பழனிச்சாமி மற்றும் ரங்கசாமி இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ரங்கசாமி மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஆகியோர் பழனிச்சாமியை கத்தியால் குத்தினர். இதில் பழனிச்சாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரங்கசாமி மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஏ.எஸ்.குளம் கிராமநிர்வாக அலுவலர் ஹேமா முன்பு சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க