• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

November 13, 2017 தண்டோரா குழு

சூலூர் கண்ணம்பாளையம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் அருந்ததிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் கிராமம்,அப்பநாயக்கன்பட்டி கிராமங்களில் மக்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தாலும், ஒரே வீட்டில் இட நெருக்கடியான சூழ்நிலையில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இருபது ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் இடம் கேட்டு மனு அளித்து வருகின்றனர். இம்மக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு இடம் இல்லை என அரசு அதிகாரிகள் பொய்யான தகவலை கூறி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று அரசு அதிகாரிகளை கண்டித்து ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், அப்பநாயக்கன்பட்டியிலுள்ள அரசு இடங்களான நத்தம், வேலி, இட்டேரி , குட்டை உள்ளிட்ட இடங்களின் காலி இடங்களின் அளவுகளை குறிப்பிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கபட்டது.

மேலும் படிக்க