• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

November 13, 2017 தண்டோரா குழு

சூலூர் கண்ணம்பாளையம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் அருந்ததிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் கிராமம்,அப்பநாயக்கன்பட்டி கிராமங்களில் மக்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தாலும், ஒரே வீட்டில் இட நெருக்கடியான சூழ்நிலையில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இருபது ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் இடம் கேட்டு மனு அளித்து வருகின்றனர். இம்மக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு இடம் இல்லை என அரசு அதிகாரிகள் பொய்யான தகவலை கூறி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று அரசு அதிகாரிகளை கண்டித்து ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், அப்பநாயக்கன்பட்டியிலுள்ள அரசு இடங்களான நத்தம், வேலி, இட்டேரி , குட்டை உள்ளிட்ட இடங்களின் காலி இடங்களின் அளவுகளை குறிப்பிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கபட்டது.

மேலும் படிக்க