• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கருமத்தம்பட்டி காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார்

November 11, 2017 தண்டோரா குழு

சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு போராடிய சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர்.

கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6 ம் தேதி போராட்டம் நடத்தினர்.

கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய 3 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 6வது நாளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனயடுத்து சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். அந்த புகாரில் காவல்துறை அமைதி வழியில் போராடிய தங்களை பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும், தொடர்ச்சியாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறந்த ஐந்துபேரின் குடும்பத்திற்கு நாகை அரசு பேருந்து பணிமனையில் இறந்தவர்களைப்போல நஷ்ட ஈடு வழங்கக்கோரியும், தமிழக அரசு கட்டிய கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மேலும் உயிர்ப்பலி நடக்காமல் இருக்க வலியுறுத்தினர்.

மேலும் படிக்க