• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு லட்சம் முன்பணம் செலுத்தினால் ஆயுள் முழுவதும் மது குடிக்கும் சலுகை

November 11, 2017 தண்டோரா குழு

சீனாவில் 1 லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் ‘பைஜு’ எனப்படும் மது வழங்கப்படும் என்று அலிபாபா மது நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் ஷாங்காய் பகுதியில், ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி ‘கல்யாணம் ஆகாதவர்களுக்காக’ மிகப்பெரிய திருவிழா நடைபெறுகிறது. இந்த கொண்டாடத்தை முன்னிட்டு சீனாவை சேர்ந்த அலிபாபா என்னும் மது நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

இதையடுத்து, இன்று(நவம்பர் 11) 1 லட்சம் ருபாய் முன் பணமாக 11,111 யுவான்(1,275 பவுண்ட்) செலுத்தினால்,‘ பைஜு’ எனப்படும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சீன வகை மதுஆயுள் முழுவதும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சலுகை பெற்றுக்கொள்ள விரும்பும் முதல் 33அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு, மாதந்தோறும் 12 மது பாட்டில்கள் வழங்கப்படும்.ஒருவேளை அந்த வாடிக்கையாளர்,5 ஆண்டுக்குள் மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இச்சலுகை அளிக்கப்படும்.

மேலும் படிக்க