• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காலில் காயத்துடன் வலம் வரும் காட்டு யானையை கண்டு கண்கலங்கிய கிராம மக்கள்

November 10, 2017 தண்டோரா குழு

கோவையில் காலில் காயத்துடன் நடக்க முடியாமல் போராடி வரும் காட்டு யானையை கண்ட கிராம மக்கள் கண்கலங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே கொம்டனூர் என்னும் மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் ஆண் யானை ஒன்று நடக்க முடியாத நிலையில் போராடி வருகிறது.கொம்டனூர், பனப்பள்ளி, கிரமங்களை சுற்றிவந்த யானை கூட்டத்தை சேர்ந்த இந்த யானை தற்போது தனியாக சுற்றி வருகிறது.காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த யானை நடக்க முடியாமல் கூட்டத்தை விட்டு பிரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது யானை நடக்க முடியாமல் அந்த கிராமத்தையோ சுற்றி வருகிறது. யானையின் இத்தகைய நிலையை கண்டு பொதுமக்கள் கண்கலங்கினர். மிகவும் சோர்வாக காணப்படும் இந்த யானைக்கு உடனடியாக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.

மேலும் படிக்க