• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாசாவுடன் இணைந்த உபர்

November 9, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் உள்ள உபேர் நிறுவனம் நாசாவுடன் இணைந்து பறக்கும் டாக்சிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அமெரிக்காவின்உபேர் நிறுவனம் பறக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்த உதவும் விமான போக்குவரத்து மேலாண்மை அமைப்பை,நாசாவுடன் இணைந்து உருவாக்க செயல்பட்டு வருகிறது. அந்த பறக்கும் டாக்ஸிக்கு ‘உபேர் ஏர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வரும் 2௦2௦ம் ஆண்டு உபேர் ஏரின் செயல்திறனை உலகிற்கு காட்டிய பிறகு, வரும் 2023ம் ஆண்டு முதல் அதன் சேவையை தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், “ஆளில்லா வான்வெளி அமைப்பிற்காக விமான போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உருவாக்க, நாசாவிண்வெளி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பல நிறுவங்களில் உபேர் நிறுவனமும் ஒன்று” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், உபேர் நிறுவனம் அதன் விமான இயக்குநராக பணிபுரிவதற்காக நாசாவின் 30 வருட அனுபவமிக்க மார்க் மூரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க