• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பானில் புகைப்பதை நிறுத்தினால் ஊழியர்களுக்கு புதிய சலுகை

November 9, 2017 தண்டோரா குழு

ஜப்பான் நாட்டிலுள்ள நிறுவனம் ஒன்று, புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஊழியர்கள், அதை கைவிட்டால் அவர்களுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவை அடிப்படையாக கொண்ட மார்க்கெட்டிங் நிறுவனமான பிலியாவின் நிறுவனர், டாகவோ அசுகாவிடம், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சிலஊழியர்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் உண்டு. அதனால், அவர்களுக்கு பணியிலிருந்து 15நிமிட இடைவேளை அளிக்க கூடாது என்று புகார் அளித்தனர்.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதத்தில்,புகைபிடிக்கும் பழக்கம் உடையர்களை தண்டிக்காமல், அந்த பழக்கத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த நிறுவனத்தின் நிறுவனர், டாகவோ அசுகா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, புகைபிடிக்காத ஊழியர்களுக்கு 6 நாட்கள் கூடுதலாக விடுமுறை தரப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஊழியர்களை, அந்த பழக்கத்திலிருந்து வெளிவர அவர்களை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பிலியா ஊழியர்களில் கிட்டத்தட்ட 35சதவீத ஊழியர்கள் புகைப்பிடிப்பவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அறிக்கை தெரிவிக்கிறது.அதோடு, ஜப்பான் நாட்டில் 22 சதவீதம் மக்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க