• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பை செம்பூர் ரயில்நிலையத்தில் தீ விபத்து

November 9, 2017 தண்டோரா குழு

மும்பையிலுள்ள செம்பூர் ரயில்நிலையத்தில் இன்று காலை நடந்த தீ விபத்தால், ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையின் செம்பூரிலுள்ள மைசூர் காலனி ரயில்நிலையத்தில் இன்று(நவ 9) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுமார் 40 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து அதிகாலையில் நடந்ததால், ரயில்நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால், யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

“மின்கசிவு காரணமாக இந்த திடீர் தீ விபத்துஏற்பட்டுள்ளது” என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க