• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ட்விட்டரில் எழுத்துக்களின் எல்லை 280ஆக உயர்வு

November 8, 2017 தண்டோரா குழு

ட்விட்டரில் 140 வார்த்தைகளை கொண்டு ட்விட் செய்து வந்த வாடிக்கையாளர்கள், இனிமேல் 280 வார்த்தைகளில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் சமூக வலைத்தளமான ட்விட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், 140 வார்த்தைகளை கொண்டு தான் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால்,வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 140 வார்த்தைகளை கொண்டு சொல்ல சிரமப்பட்டனர்.இந்நிலையில் ட்விட்டர் பதிவுகளில் எழுத்துக்களின் எல்லையை 140 என்பதில் இருந்து இருமடங்கு அதிகரித்து 280 ஆக மாற்றியது.

ட்விட் செய்யும் வார்த்தைகளை அதிகரிப்பதன் மூலம், சமூக வலைத்தள மேடையை எளிதில் மக்கள் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் ஆங்கிலம், ஸ்பானிஷ், போச்சுகீசு ஆகிய மொழிகளில் மட்டுமே 280 எழுத்துக்கள் வரை கொண்ட பதிவுகளை எழுத முடியும் என்று இருந்த நிலையில்,இன்று முதல் 280 எழுத்துக்களை பயன்படுத்தும் வசதி அனைத்து மொழிகளுக்கும் கிடைக்கத் தொடங்கிவிட்டது.

மேலும் படிக்க