• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சட்டப்பூர்வமான திருட்டு – மன்மோகன்சிங்

November 7, 2017 தண்டோரா குழு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சட்டப்பூர்வமான கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தொழிலதிபர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியானது தவறான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.இவை இரண்டு அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை பெரிதும் பாதித்த திட்டம் அறிவிக்கப்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. இந்த திட்டத்தினால், லாபம் மற்றும் பலன் குறித்து அரசு புதிதாக எந்த அறிக்கையும் அரசு வெளியிடவில்லை. இந்த திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் ஏற்கனவே கூறியதை திரும்பி கூறுகிறேன். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்பது அங்கீகரிக்கப்பட்ட கொள்ளை. சட்டப்பூர்வமான திருட்டு எனக்கூறினார்.

மேலும் படிக்க