• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சி தொடங்க மக்களிடம் பணம் கேட்பதா ? கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

November 7, 2017 தண்டோரா குழு

அரசியல் கட்சி தொடங்க மக்களிடம் பணம் கேட்பதா? என நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை முலக்கொத்தளத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, யார் வேண்டுமானாலும் அரசியலில் நிற்கலாம். ஆனால், அதை முடிவு செய்யும் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் கட்சி தொடங்க தொண்டர்களிடம் கொடை கேட்டவர் கமலஹாசன் என குறிப்பிட்டார்.

மேலும், எந்த அடிப்படையில் ரூ.30 கோடி தொண்டர்களிடம் இருந்து வசூலிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தனக்கு புரியவில்லை என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் தொண்டர்களிடம் பணம் கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க