• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுபான விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயரை சூட்டுங்கள்- பா.ஜ.க அமைச்சர்

November 7, 2017 தண்டோரா குழு

மகாராஷ்டிராவில் மதுபானங்களுக்கு பெண்களுடைய பெயர் வைத்தால், அதன் விற்பனை அதிகம் ஆகும் என்று பா.ஜ.க வைச் சேர்ந்த அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வட பகுதிலுள்ள நண்டுர்பரிலுள்ள சட்புடா கூட்டுறவு சக்கரை தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை(நவ 4) நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு, பா.ஜ.க கட்சியின் நீர் பாசன துறை அமைச்சர் மகாஜன் பேசினார்.அவர் அந்த கூட்டத்தில் பேசுவதற்கு முன், அந்த தொழிற்சாலையின் யூனிட் தலைவர், தங்களுடைய மதுபான விற்பனை குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.

அதன் பிறகு மகாஜன் பேசுகையில், “உங்கள் மதுபானம் அதிகமாக விற்பனை ஆவதில்லை என்று கூறினீர்கள். உங்கள் மதுபானத்தின் பெயர் என்ன என்று கேட்டபோது, ‘மகாராஜா’ என்று பதில் அளித்தீர்கள். ‘மகாராஜா’வுக்கு பதிலாக ‘மகாராணி’ என்று பெயரிட்டால், அதனுடைய விற்பனை அதிகமாகும்.

“ஒரு மாநிலத்தின் அமைச்சர் மதுபானம் அதிகமாக விற்பனை செய்ய ஊக்குவிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய இந்த கருத்துக்கு பல அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில், மதுபான விற்பனைக்கு எதிராக தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க