• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

November 7, 2017 தண்டோரா குழு

கோவையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் வழக்கறிஞர் ராஜரத்தினத்தை கைது செய்து சித்திரவதை செய்ததைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாறன்குளத்தைசேர்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம்,கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ,வீட்டிலிருந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

ராதாபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவர், அங்கு வைத்து கட்டிப்போடப்பட்டு, வாயில் செருப்பை கவ்வக்கொடுத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். பல மணி நேரம் இப்படித் தாக்கப்பட்ட அவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சியால் நீதிமன்றத்தின் பொறுப்பில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தொடர்பான வழக்குகளை இவர் கவனித்து வந்தார்.கடந்த மூன்றாம் தேதியன்று, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவுசெய்வதாக அவர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர் யார் மீது அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தாரோ, அந்த காவலர்களே தன்னைத் தாக்கியதாக ராஜரத்தினம் தெரிவித்திருந்தார்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து , நீதிமன்ற வாயிலில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க