• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை – கமல்

November 7, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை கமல் திறந்து வைத்தார்.

இந்தவிழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன்,

தேங்கிய மழைநீரை அரசு அகற்றி வருவதால், நாங்கள் மருத்துவ முகாமை நடத்துகிறோம். மழைநேரங்களில் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மருத்துவமுகாமை தொடங்கி வைப்பதாக கூறினார்.

மேலும், மருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. எங்களுடைய பணிகள் அமைதியாக நடந்து கொண்டிக்கிறது. எங்களுடைய முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை நேரங்களில் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். புதியவர்களும், பழையவர்களும் பாராட்டுகிறார்கள் என்றால் நம் உழைப்புதான் காரணம். நலத்திட்டப்பணிகளுக்காக அரசியலை பயன்படுத்திக் கொள்வதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

மேலும் படிக்க