November 6, 2017
தண்டோரா குழு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளளிட்ட 4 அதிகாரிகள் நாளை(நவ.7) ஆஜர் ஆக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பயன்படுத்தாத நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவையடுத்து 3 மாதத்திற்குள் அமல்படுத்துவதாக கடந்த அக்டோபரில்தமிழக அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், சோமு என்பவர் இது குறித்துதொடர்ந்த வழக்கில்தலைமைச்செயலாளர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 4 பேர் உரிய விளக்கமளிக்க ஆஜராகுமாறு இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.