• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாயில் டிராபிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை

November 6, 2017 தண்டோரா குழு

துபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்தாதவர்கள், இவ்வாண்டிற்குள் செலுத்தினால், அவர்களுக்கு 5௦ சதவீதம் தள்ளுப்படி வழங்கப்படும் என்று துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கும் துபாயில் நகரில் கடந்த ஆண்டு, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதை செலுத்தாதவர்கள், இந்த ஆண்டிற்குள் செலுத்தினால், அவர்களுக்கு விதிக்கபடிருக்கும் தொகையில், 5௦ சதவீதம் தள்ளுப்படி செய்யப்படும் என்று அந்த நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதம், இவ்வாண்டிற்குள் செலுத்தப்படும் என்றால், அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி உண்டு.அதாவது அபராதத்தை 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அபராத தொகையை யூஏபி வங்கிகளில் செலுத்த வேண்டும் அல்லது ஆன்லைன் கட்டணம் உள்ளிட்ட பல மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி அபராத தொகையை செலுத்தலாம். போக்குவரத்து துறையுடனும், அனைத்து காவல்துறை மற்றும் கார் பதிவு மையங்கள் மற்றும் அனைத்து வணிக மையங்களிலும் கியோஸ்க்களில், அபராத தொகையை செலுத்த முடியும்” என்று துபாய் போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க