• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சீனா எதிர்ப்பு

November 6, 2017 தண்டோரா குழு

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அருணாச்சலப் பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பிரச்சினை உள்ளது. இதற்கிடையில், நேற்று அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில்,அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், தங்களது நிலையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், பிரச்சனைக்குரிய பகுதியில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் செய்வது இருநாடுகளுக்கு இடையிலான அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எனவும் இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.எனினும், பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வருமென நம்புவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க