• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப்

November 6, 2017 தண்டோரா குழு

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப், உலகமெங்கும் உள்ள சீக்கியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்ககுடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு இரண்டு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். “சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரும் அதன் முதல் குருவாக இருந்தவருமான குரு நானக் தேவ்ஜியின் பிறந்த நாளை கொண்டாடும் உலகமெங்கும் உள்ள சீக்கியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை, அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 1௦௦ ஆண்டுகளுக்கு மேலாக,அமெரிக்கா ராணுவம் மற்றும் பொது சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபரிமித வளர்ச்சிக்கு,அங்குள்ள சீக்கியர்களின் பங்கு மிகவும் அதிகம் என்று டிரம்ப் பெருமையுடன் கூறினார்.

மேலும் படிக்க