• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி!

November 6, 2017

சவுதி இளவரசர் பயணம் செய்த ஹெலிகாப்டர்,ஏமன் நாட்டின் எல்லை அருகில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார்.

சவூதி அரேபியாவிலுள்ள ஆசிர் மாகாணத்தின் துணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் முகுரின், வான்வழி ஆய்வு நடத்த சில அதிகாரிளுடன் ஹெலிகாப்டரில் பயணித்தார். ஆனால், அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஏமன் நாட்டின் எல்லையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இளவரசர் மன்சூர் பின் முகுரின் உயிரிழந்தார். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் அவருடன் பயணித்த அதிகாரிகளின் நிலை என்னானது என்பதை குறித்தும் ஒன்றும் தெரியவில்லை.

மன்சூர் பின் மாக்ரோன் சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க