• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் கமல் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் – அசோக் சர்மா

November 4, 2017 தண்டோரா குழு

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலை சுட்டுக்கொல்ல வேண்டும் என அகில இந்திய இந்து மகாசாப துணைத் தலைவர் கூறியுள்ளார்.

சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூக பிரச்சனை குறித்து பேசிவரும் நடிகர் கமல்ஹாசன் பிரபல வார இதழுக்கு கட்டுரை எழுதி வருகிறார். அதில் இந்து தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என்றும் வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உ.பி.யில் கமல் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் மீரட்டில் செய்தியாளர்களிடம் பேசி அகில இந்திய இந்து மகாசபா துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா,

இந்து மத உணர்வுகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்த பூமியில் வாழ உரிமையில்லை. கமல் மற்றும் அவரை போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்படவேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் அப்போது தான் மற்றவர்களுக்கு பாடம் கிடைக்கும். கமல் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் நடிக்கும் படங்களை அனைத்து கட்சி உறுப்பினர்க்ளும் புறக்கணிக்க வேண்டும். இந்திய மக்கள் கமல் படங்களை புறக்கணிக்க வேண்டும். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க