• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்- மத்திய அரசு

November 4, 2017 தண்டோரா குழு

தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரையுடன் கேரட் அளவையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.தற்போது, சில கடைகளில், பி.ஐ.எஸ்., முத்திரையிட்ட நகைகள் விற்கப்படுகின்றன. எனினும், அவற்றில், தங்கத்தின் தரம் குறித்த போதுமான அம்சங்கள் இல்லை.இதனால் தங்கத்தின் தரத்தை அறிய முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் நகைகளின் தரத்திற்கு ஏற்ப, 14, 18, 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை, 2018 ஜனவரிக்குள் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க