• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறைக்கு கமல் பாராட்டு !

November 4, 2017 தண்டோரா குழு

மழை வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க அதிக அளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறைக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காவல்துறை பணிகளுக்கு இடையே நிவாரணப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி. சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் அவர்கள் சிறந்த குடிமகன்களாக ஒளிருக்கின்றனர்.இது போன்று தமிழர்களும் ஈடுபடவேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், மற்றொரு டுவீட்டில், இயக்க தொண்டர்கள் எப்போதும் மழை கால உதவிகளை செய்யும் போது அரசு பணியாளர்களுக்கு இடையூரோ கேலியோ செய்யாமல் உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க