November 3, 2017
தண்டோரா குழு
ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது.
உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலி வாட்ஸ் ஆப். செய்தி பரிமாறுதல், புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாற வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செயல்படாமல் இருந்ததால் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி முடங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.