• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து முதலிடம்

November 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவை சேர்ந்த போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், ஜெர்மன் நாட்டின் தலைவர் ஏஞ்சலா மெர்கல் 7வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் போர்பஸ் பத்திரிக்கை,சமீபத்தில் உலகில் சக்திவாய்ந்த 1௦௦ பெண்களை கொண்ட பட்டியலை வெளியிட்டது. அதன்படி, ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் 7வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து,பிரிட்டிஷ் பிரதமர் தெரிஸா மே இரண்டாவது இடத்திலும்,பில்கேட்ஸ் பவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 3-வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஷெரீல் சாண்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் 19-வது இடத்திலும்,நடிகை பிரியங்கா சோப்ரா 97வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு, அமெரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் ஒபாமாவும் அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு, மிச்சேல் ஒபாமாவின் பெயர் அந்த பட்டியிலிருந்து நீக்கப்பட்டது. கடந்த 2௦16 உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியிலில் 2வது இடத்திலிருந்த ஹில்லரி கிளின்ட்டன் தற்போது 65வது இடத்தில் உள்ளார்.

மேலும்,இந்த பட்டியலில் உள்ள பெண்கள் பாதி பேர் அமெரிக்கர்கள், எட்டு பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், மற்ற 13 பேர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க