• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

November 2, 2017 தண்டோரா குழு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு உட்பட 5 வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, ஓபிஎஸ் உட்பட 12 எம்எல்ஏக்கள் பதவி விலக வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, பெரும்பான்மையை நிருபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, முதல்வருக்கு எதிராக ஓட்டளித்த ஓபிஎஸ் பதவி விலக தொடரப்பட்ட வழக்கு உட்பட 5 வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மேலும்,இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்போது இந்த வழக்குகளை இரண்டு நீதிபதிகளுக்கு மேலடங்கிய அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றும்,கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க