• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலியான விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 2, 2017 தண்டோரா குழு

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால்,சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பாவனா, யுவஸ்ரீ மற்றொரு சிறுமி மூவரும் வெளியே தெருவில் விளையாடச்சென்றனர். விளையாட்டு ஆர்வத்தில் அவர்கள் வீட்டருகில் மின் இணைப்பு பெட்டி இருக்கும் பகுதிக்கு அருகில் சென்றுள்ளனர்.

மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. அதில் மின் இணைப்புப் பெட்டியிலிருந்த மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர்.

மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட இரண்டு சிறுமிகளையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் சிறுமிகள் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க